Thursday, April 14, 2005

சித்திரை மகளே வருகவே!

சித்திரை மகளே வருகவே!

மனை மெழுகி,
தோரணங்கள் முடித்து,
மாக்கோலம் இட்டு,
புத்தாடை உடுத்தி,
களித்திருக்கும் நாளிது,
சித்திரை மகளே வருகவே!

தாரண வருடத்தின்கனவுகளை
பார்த்திப வருடத்தில்
நனவாக்கிட
சித்திரை மகளே வருகவே!

தோல்வியை ஏற்கும்
மனப்பாங்கும்,
எதிரியையும்
முத்தமிடும்
மனப்பக்குவமும் தந்திட,
சித்திரை மகளே வருகவே!

வளங்கள் எல்லாம் தங்கிடவும்,
வாழ்வு மேலும் சிறப்புறவும்,
மங்களம் எங்கும் பொங்கிடவும்,
சித்திரை மகளே வருகவே!

சிந்தனை மேலும் சீர்பெறவும்,
பார்வை மேலும் தௌவாகவும்,
வல்லமை நாங்கள் பெற்றிடவும்,
சித்திரை மகளே வருகவே!

மாம்பூவின் வாசமும்,
வேம்பின் குணமும்,
கொண்ட நல்ல தமிழ்நான் செய்திட
சித்திரை மகளே வருகவே!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? pacific poker bonus
online poker