Friday, April 15, 2005

மழைக்கால நினைவுகள்

மழைக்கால நினைவுகள்
Thanks : www.flickr.com
காலை மழையின் போது
குடையில்தான் வந்தாய்
என்றாலும்,
உன் மீது படிவாய் சாரல்.
ஏனோ எனக்கு
பனியில் நனைந்த
ரோஜாவின் நினைவு.

சற்றுமுன் நின்ற மழை,
துளிதுளியாய் தூவானம்,
வீசிய காற்றில் பச்சை வாசம்,
நெஞ்சை ஊடுரும் வாடை,
கால் கூசும் புல்லின் நுனி,
ஏனோ எனக்கு
உன்னோடிருந்த நினைவு.

மாறனின் கனைகளாய் மழைத்துளி,
ஒதுங்கிய மரமும் சிலிர்த்து,
நனைந்த எனக்கு
துவட்டி கொள்ள ஏனோ
உன் தாவணியின் நினைவு.

மழைக்கால குளிர் இரவு,
மேகத்தின் மறைவில்
எட்டிபார்க்கும் நிலவு,
ஏனோ எனக்கு
உன் வெட்கத்தின் நினைவு.

இருள் போர்த்திய சாலைகள்,
தூங்கா விளக்குகளாய் மின்மினிக்கள்,
சாலையோர கடையின் தேநீரின் சுவை,
இதயத்தின் அறைகளில் இனம் புரியாத இன்பம்,
ஏனோ எனக்கு
நம் காதலின் நினைவு.

Photo by : www.flickr.com

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At 11:09 PM, Anonymous Anonymous said...

:)

 
At 8:36 PM, Anonymous Anonymous said...

Ada....superb..

- Sivagami

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? pacific poker bonus
online poker