Monday, April 18, 2005

ஒரு பதிவின் கதை

ஒரு பதிவின் கதை

ஒரு மழை நாளின் மாலையில் நண்பர் தேசிகனை (http://desikann.blogspot.com) சந்திப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் படிக்கும் புத்தகங்கள் பற்றியும் அவர் எழுதின பதிவுகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். வீட்டில் யாரும் இல்லாததால் அவர் எனக்கும், அவருக்குமாக காபி கலந்து கொண்டிருந்தவர், "நீ ஏன் ஒரு பிளாக் எழுதக்கூடாது" எனக்கேட்டார்.
"சார் என்ன ஜோக்கா"
"இல்லப்பா, நீ கவிதை, கட்டுரையின்னு ஏதோ எழுதற. அதை பல பேர் பார்க்கட்டுமே"
"சார், நான் பல பேர் முன்னாடி அவமானபடனும்கிறது உங்க ஆசையா" அதற்கு அவர், "இதுல அவமானம், வெகுமானம் ஒன்னுமில்ல. அவரவர் மனசில இருக்குறத பகிர்ந்துக்கிறத்துக்கு தான் பிளாக் வைச்சிருக்கா.நீ தைரியமா எழுது. எழுத எழுத தான் பழகும். இந்த வாரத்துல தமிழ் புத்தாண்டு வருது, அன்னைக்கு பிளாக் ஆரம்பிச்சுடு" என்றார்.
"சரி ஆரம்பிக்கிறேன். பிளாக்கிற்கு ஏன்ன பெயர் வைக்கலாம், சொல்லுங்கோ". "பெயர் என்னப்பா பெருசா! ஏதாவது சின்னதா, வாயில நுழையற பெயரா வை."
"வாயில நுழையற பெயருனா, இட்லி-வடைன்னு தான் வைக்கனும். அதுவும் நண்பர் ஆனந்த் கோபாலன்(http://idlivadai.blogspot.com) ஏற்கனவே வைச்சுட்டார். நான் பொங்கல்-வடை, அடை-அவியல்ன்னு try பன்னட்டுமா" என்றேன்.
"இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைவு இல்லை. ஏதாவது வைச்சி ஆரம்பி" என்றார்.
ஏனவே நேயர்களே, நண்பர் தேசிகனின் வழிகாட்டுதலினால் இதோ என் வலைப்பதிவு உங்கள் பார்வைக்கு......
ஆரோக்கியமான விமர்சனங்கள் தான் ஓருவனை வளர்க்க முடியும் என்பதை அறிந்தவன் நான். எனவே உங்கள் விமர்சனங்களுக்காக காத்திருக்கும் உங்கள் அன்பு மித்ரா (சாய் கிருஷ்ணா).

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

At 8:25 PM, Anonymous Anonymous said...

பெங்களூர் பற்றி கொஞ்சம் எழுதுங்களேன் மித்ரா.அத்துடன்
நீங்கள் தமிழ் வளர்ப்பது பற்றியும்,
தாடி வளர்ப்பது பற்றியும் கூட எங்களுக்கு கூறமுடியும்.வாழ்த்துக்கள்.

 
At 10:32 PM, Anonymous Anonymous said...

வாங்க வாங்க....நல்வாழ்த்துக்கள்

 
At 12:03 AM, Blogger Muthu said...

சாய் கிருஷ்ணா,
உங்களின் வலைப்பதிவுலகு வரவுக்கு இனிய வரவேற்புக்கள்.
தேர்ந்த எழுத்தாளர் மட்டும்தான் எழுதமுடியும் என்றிருந்தால் உலகில் யாரும் எழுதஆரம்பிக்கவே முடியாது.ஆனால், ஆர்வத்துடன் எழுத ஆரம்பித்தவர் எவராலும் பழக்கத்தால் தேர்ந்த எழுத்தாளர் ஆகமுடியும். எழுதிப்பாருங்கள் உங்களுக்கே இது தெரியும்.

விரைவில் தேர்ந்த எழுத்தாளராக வாழ்த்துக்கள்.

 
At 6:38 AM, Blogger துளசி கோபால் said...

வாங்க மித்ரா,

வந்து இந்த ஜோதியில் கலந்துட்டீங்க!!! வாழ்த்துக்கள்!!!

நானே எழுதறப்ப நீங்கள் தாராளமாயெழுதலாம். எல்லாம் ஒரு ஆரம்ப 'பயம்'தான்.
போகப்போகப்பாருங்க. வெளுத்துக் கட்டப்போறீங்க:-))))

என்றும் அன்புடன்,
துளசி.( நியூஸிலாந்து)

 
At 2:11 PM, Anonymous Anonymous said...

Hi Saimitra,
I'm Anand Gopalan of idlivadai.blogspot.com! Sorry for stealing your intended blogging space! Just did a search, and found your website. Best of luck for your blogging!
cheers.
Anand

 
At 9:17 PM, Anonymous Anonymous said...

Hi saimithra, unga blog nalla iruku. ungaloda pere arumai, athula ungaludaiya kadhal theriyuthu. valthukal,

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? pacific poker bonus
online poker