Saturday, April 30, 2005

காதல் அத்தியாயங்கள்

காதல் சாமானியனையும் அரசனாக்கும், அரசனையும் சாமானியனாக்கும். அதற்கு அவ்வளவு சக்தி உண்டு.
உலகம் முழுவதும் ஏற்று கொள்ளும் ஒரெ தத்துவம் காதல்.
காதலால் ஆளபடும் நான், என் மனதில் தோன்றியவைகளை எழுதுகிறேன்.......

இறைவா,
இனி ஒரு பிறவி உனக்கு இல்லை
என்றவரம் மட்டும் தந்து விடாதே!
அவளை காதலிக்க இந்த ஒரு
பிறவிமட்டும் எனக்கு போதாது.


அத்தியாயம் - 1

அன்றொரு நாள் மாந்தோப்பில் அம்ர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். "உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?" - திடீரென்று கேட்டாய்.
"எதற்காக?"
"சும்மா சொல்லுங்கள்" என்றாய்.
நான் சிறிது யோசித்து விட்டு, " ம்... அதிகாலை நேரம், மண்வாசனை, நீர் நிறைந்த பொன்னியாறு, சிவன் கோயில்,..." நான் பேச பேச உன் கண்கள் கலங்குவதை கண்ட நான், பேச்சை நிறுத்தி, "என்னடா, என்னாச்சு" என்றேன், உன் கண்களை துடைத்தபடி.
நீ சினுங்கலுடன் ஆரம்பித்தாய், "என்னைய யாராவது உனக்கு என்ன பிடிக்கும் என்றால், உங்கள தவிர வேறொன்றும் தெரியல, ஆனா நீங்க என்னைய மறந்துட்டு எல்லாத்தையும் சொல்றிங்க" என்றாய்.
"அடி பைத்தியமே, இதுக்கு போயி அழுதியா, எனக்கு இதுவெல்லாம் பிடிக்கிறதே உன்னைய காதலிக்க ஆரம்பிச்சதப்பறம் தான்" என்றேன்.
"பொய் சொல்றீங்க, இல்ல நீங்க சொல்ரது நிசம்ன்னா எனக்கும் பொன்னியாத்துக்கும் என்ன சம்பந்த்ம் சொல்லுங்க" என்றாய்.
"அதுவா நிறைய இருக்கு. பொன்னியாறு தன் அழகான மேடு, பள்ளங்களையெல்லாம் தண்ணீரை சேலையாகவும், கரையோர மரங்களை சேலையின் தலைப்பாகவும் கொண்டு மறைச்சிடிருக்கு இல்லையா, அது போல நீயும்...." என்றவுடன், உன் அழகான கையால் என் வாயைப்பொத்தி, உன் முகம் கொள்ளா வெட்கத்துடன், "போதும் போதும், பொறுக்கி, நீ என்ன சொல்ல வர்றன்னு தெரியுது" என்று என் தோளில் உன் முகத்தை புதைத்துக்கொண்டாய்.
அட, எனக்கு இதுவும் பிடிக்கும்!
(இன்னும் சொல்வேன்......)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

At 4:49 PM, Anonymous Anonymous said...

மித்ரா,
இது உங்க அனுபவமா? நல்லா தான் இருக்கு... கலக்குங்க...

- அனு

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? pacific poker bonus
online poker