Friday, May 20, 2005

காதல் அத்தியாயங்கள்....


தயவு செய்து தூங்கும் போது
என்னை எழுப்பாதீர்,
என் தூக்கம் கலையும் என்ற
கவலை இல்லை எனக்கு,
என்னுள் உறையும் என்னவளின்
தூக்கம் கலைய கூடாது என்ற
கவனம் எனக்கு.

அத்தியாயம் - 2

நம்முடைய காதல் நம் இருவர் வீட்டிற்கும் தெரியவந்தபின் ஒரு நாள்."இன்னைக்கு உங்க அப்பா, அம்மாவை பார்க்க போறோம்ன்னு சொன்னிங்க இல்லயா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு" என்றாய்.
"இதுல பயம் என்ன இருக்கு. நான் தான் உன் கூட இருப்பேன் இல்லையா"
சற்றே வருத்ததுடன் ஆரம்பித்தாய், "உங்க வீட்ல என்னைய திட்டுவாங்ளோன்னு பயம் இல்ல. எனக்கு வேற பயம் தான்."
"என்னடி குழப்புற! திட்டமாட்டாங்க, பயம் இல்ல, பயமா இருக்குன்னு மாத்தி மாத்தி சொல்ற".
நீ மெதுவாக ஆரமித்தாய், "உங்க வீட்டில ஆசாரம் பாப்பாங்களா."
"ஆமாம் கொஞ்சம் இல்ல ரொம்பவே பாப்பாங்க. அதுக்கு என்ன இப்ப"
நீ கண்களில் நீர் முட்ட, "என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட என்ன பத்தின கவலையே இல்ல. நீங்க சுலுவா சொல்லிட்டீங்க. என் கஷ்டம் எனக்கு தான். இப்ப என்னைய எத்துக்கிட்டலும் பின்னால இதுவே பெரிய பிரச்சனையா மாறிடகூடாதுன்னு கவலையா இருக்கு" என்றாய்.
"அடி பைத்தியமே! நீ கவலையே பட வேண்டாம். அவங்க பாக்கற ஆசாரம்யேல்லாம் சாதாரண மக்களுக்கு தான். உன்னைய மாதிரி தேவதைக்கு இல்ல" என்றேன் உன் கண்களை பார்த்து.
வெட்கத்தால் கன்னம் சிவக்க என் மார்ப்பில் புதைந்தப்படி நீ கேட்டாய், "பொறுக்கி, எங்கேயிருந்து இப்படியெல்லம் பேச கத்துக்கிட்ட".
"காதலிடமிருந்து தான் கத்துக்கிட்டேன்" என்றேன்.
எனக்கு தெரியும் நான் பொய் சொல்லவில்லை.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? pacific poker bonus
online poker